உனக்கில்லையடி இது ஊருக்குதான்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

Saturday, August 29, 2009

எங்களிட்ட எதில்லாட்டியும் அதிருக்கு....








ஆ…. எப்பிடி இருக்கிறியள் எல்லாரும்? ஏதோ நல்லா இல்லை எண்டு சொன்னா மருந்து தாற டாக்குத்தர் மாதிரி உதொரு கேள்வி இவனுக்கு எண்டு நைக்கிறியளே? ஒற்றைப்பனை என்ன டாக்குத்தருக்கு படிச்சுப்போட்டே சுகம் விசாரிக்குது. மழைக்கும் பள்ளிக்கூடத்துப்பக்கம் ஒதுங்காததுதானே இது. நானேன் கேட்டநானெண்டா இப்பதானே டெங்கு எண்டீனம் பண்டிக்காச்சல் எண்டீனம் உந்த வியாதியள்ள ஏதும் எங்களுக்கும் வந்திடுமோ எண்ட பயம்தான். ஏனெண்டா பாருங்கோ 2011 இல சனத்தொகை கணக்கெடுக்க போயினமாம் நாங்கள் தான் ஏற்கனவே எக்கச்சக்கமா குறைஞ்சு போய்க்கிடக்கிறம் அதுக்குள்ள இதுகளும் வந்திட்டுதெண்டா அதால எல்லாரும் கவனமா இருங்கோ என்ன!

இப்பிடித்தான் கிட்டடீல பள்ளிக்கூட பெடி ஒண்டோட கதைச்சுக்கொண்டிருக்கேக்க படிப்பைப்பற்றி கதைவந்திட்டுது. முந்தி எங்கிட சனம் நெஞ்ச நிமித்துற முதல் விசயமுதெல்லே. எதில்லாட்டியும் எங்களிட்ட படிப்பிருக்கெண்டு தானே அதையும் புடுங்க…. வேண்டாம் உது கதை வேறயெங்கயோ போகுது… பின்னபாருங்கோ பெடீற்ற ஏன்ராப்பா எப்பபாத்தாலும் உந்த இன்ரனெட் கேம்ஸ் இல்லாட்டி லிட்டில் ஏசியா பஸ் ஸ்டான்ட் எண்டு சுத்திக்கொண்டே இருக்கிறா அப்ப என்ன இரவிரவா நித்திரை முழிச்சு படிக்கிறியோ எண்டு கேக்க அவனொரு சிரிப்பு சிரிச்சான் பாருங்கோ அதுக்கு அர்த்தம் விஜய் சொன்ன மாதிரி எந்த Dictionary லும் இல்லை. ஏன்ராப்பா சிரிக்கிறா எண்டு நான் கேக்க போன ஞாயிற்றுக்கிழமை பேப்பரை தூக்கி போட்டுட்டு ஒரு வசனமொண்டு சொன்னான் பாருங்கோ. எங்கிட தமிழ்பட நடிகர்மார் தோத்து போவினம்! அப்பிடி என்ன வசனமெண்டு கேக்குறியளே? “நாங்க ஃபெயிலானாலும் டிகிரி வாங்கிடுவம்ல”
இவன் மட்டுமில்ல இவனை மாதிரி கனக்க பெடிபெட்டயள் உந்த விளம்பரங்கள பாத்திட்டு உப்பிடித்தான் ஒரு மார்க்கமா திரியுதுகள். உதென்ன உது புதுசில்லெடுப்பா இருக்கேயெண்டு உந்த “நீங்கள் A/L மற்றும் O/L தரத்தில் சித்தி பெறவில்லையா கவலை வேண்டாம எங்களி;டம் வாருங்கள்” எண்ட விளம்பரங்கள் வந்த பேப்பரையும் தூக்கிக் கொண்டு அதைப்பற்றி விசாரிப்பமெண்டு வெளிக்கிட்டன். என்னது? நானேனோ???? நானும் ஒரு சேர்டிபிக்கட்ட தேடிப்போடுவம் எண்டுதான். ஆனா போன வேகத்திலயே திரும்பிவந்திட்டன் பின்ன நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும் சிங்கியடிக்கிற என்தரவளி லச்சங்களுக்கு ஆற்றவீட்ட போறது.

இதொரு கூத்தெண்டா இங்க இன்னொரு கூத்து "ஓடியா ஓடியா விசா எடுத்துத்தாறன் ஓடியா" எண்டுறது. ஏதோ தாங்கள் தான் விசா Officers மாதிரி கூவுற இன்னொரு கூட்டமும் இஞ்சினேக்க திரியுது. என்ன உவை செய்யினம் எண்டு விசாரிச்சா Form நிரப்பிக்குடுக்கினமாம் அதுக்கு வேண்டுற காசு 50,000 மாம். விசாக்கிடைச்சா மிச்சம் குடுக்கோணுமாம். கவனிச்சீங்களே விசா கிடைச்சா. அப்ப நம்பிக்கை இல்லாம தானே அனுப்பீனம். இதில உந்த படிச்ச கெட்டிக்கார பிள்ளையளும் தங்கிட சேர்ட்டிபிக்கற்றுகளோட இந்த கூட்ங்களுக்கு பின்னுக்கு திரியிறத பாக்கேக்கதான் வயித்தப்பத்தி எரியுது பாருங்கோ. ஏனெண்டா எங்களுக்கு எதில்லாட்டியும் படிப்பிருக்கு அதுக்காக நாங்க எதுவும் செய்வம் எண்டதாலதானே இப்பிடியெல்லாம் ஏமாத்திற கூட்டமும் புதுசு புதுசா முளைக்குது.

சரி வேற என்ன எனக்கு பட்டதை நான் சொல்லிப்போட்டன். நீங்கள் உங்களுக்கு ப்பதை சொல்லுங்கோவன்.

சரி அப்ப நான் வாறன் என்ன......



Wednesday, August 26, 2009

அரோகரா……….. பாவம் நம் கடவுளர்கள்



தலை நகரில மாசம் ஒரு தேர் எண்டான்ன இழுத்துப் போடோணும் எண்டது இப்ப ஒரு வேண்டுதல் இல்லாத வேண்டுதல் பாருங்கோ, ஒரு சாரார் மட்டுந்தான் தேர் இழுத்து உழைக்கிறதோ எண்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கத்தால இழுக்கினம்.
நல்லா நடக்குது பாருங்கோ பாண்டு வாத்தியமும், பைலா நாட்டியமுமா கடவுளர்களுக்கு ஊர்வலம் பாவம் அவைக்குத்தான் ஊருலகத்தில என்ன நடக்குதெண்டு தெரியாம ஏறிக்குந்திக்கொண்டு அவையும் வெளிக்கிட்டிட்டீனம்.
எங்களுக்கென்ன எத்தினபேர் வந்தாலும் அரிச்சினைத்தட்டும், அள்ளிப் பணமும் குடுக்கிறது குடுக்குறதுதான் இதில எத்தின தாலிக்கொடி எத்தின சங்கிலி அறுபட்டதெண்டது அவருக்குத்தான் வெளிச்சம்பாருங்கோ. கடவுளச் சாட்டி எல்லாரும் உழைக்கேக்க கள்ளரும் பாவம் தானே. எனக்கொண்டு விளங்கேல்லப் பாருங்கோ அதேன் எல்லாக் கடவுளரும் வெள்ளவத்தைய மட்டுந்தான் சுத்தி சுத்தி வருகினம். நானென்னத்த சொல்லுறது நீங்களே பாருங்கோவன்.

Tuesday, August 11, 2009

சத்தியமா அதுக்கில்ல

பதிவை தொடங்கினதோட அண்டைக்கு எழுதிட்டு அப்பிடியே விட்டு போட்டன் என்ன நடந்ததெண்டா நாங்கெல்லாம் எழுதினா பாருங்கோ பாருங்கோ எண்டு கூவி கூவி சொன்னாலும் ஆர் பாக்க போயினம் ஊரில இருக்கிற பாசக்கார பயலுவளுக்கெல்லாம் சொல்லி அவங்கள் பாத்திட்டு சொல்லாம கொள்ளாம மொபைல ஓப் பண்ணிவச்சிட்டு இருக்கேக்கையே யோசிச்சிருக்கோணும் அதுக்கு பிறகும் ஆயிரத்தெட்டு கோல் அடிச்சு கரைச்சல் தாங்கேலாம "மச்சான் அந்தமாதிரி எழுதிஇருக்கிறாய்" எண்டு சொன்னாலும், கதைய குறைக்கேக்கயாவது யோசிச்சிருக்கோணும் அப்பவும் ஒண்டும் விளங்கேல்ல பிறகு வழமை போல ரெண்டு ரூவாய் கோலடிக்க சொந்தம் பாத்திட்டு சொல்லிச்சுது "அரசியல் கதைக்காதஎண்டு". எங்கிட மாதகல் சங்கமித்தை அம்மன் ஆணையா நான் அரசியல் கதைக்கேல்ல. இங்க இருந்து உதெல்லாம் கதைக்க ஒற்றை பனைக்கென்ன விசரே?. ஆனான பட்ட எத்தினையோ பேர் கூடி கும்மியடிச்சு எழுதெழுதெண்டு எழுதி கிழிச்சு குப்பையாக்கி , அள்ளி அதில கூழ்காச்சி குடிச்சு இன்னும் என்னன்னவோ எல்லாம் செய்ய இருக்கினம், அதுக்க இந்த நாய்க்கேன் போர் தேங்காய்? பிறகு சங்கமித்த அம்மன் கண்ணை குத்தி போடுமெல்லே.


Wednesday, July 22, 2009

எப்ப ஊருக்கு போறியள்?


நானும் கூட, நானும் கூட எண்டு Blog தொடங்கியாச்சு எதாவது எழுதுவம் எண்டு தட்டினா தமிங்கிலிஷ்ல எல்லோ வருகுது!
உங்களுக்கு தெரியும் தானே, எல்லாரும் ஏறினம் எண்டு தானே நானும் சக்கடத்தார் ஆனனான். நானென்ன முன்ன பின்ன இதுகளகண்டனானே?

சரி அத விடுவம் நான் என்ன சொல்லவந்தானான் எண்டா, இண்டைக்கு இஞ்ச பஸ் வர்ற கதைதான் பாருங்கோ ஹாட் டொபிக், மத்தியானம்போல உந்த நியூஸ் அலெர்ட் வந்துது பாருங்கோ ,உங்க ரோடில காணுறவை அரைவாசிபேரும் எப்ப ஊருக்கு போறியள்? பஸ் வருகுதாம், வந்திட்டுதாம், இதுதான் கதை போதாததுக்கு இஞ்ச இருந்து கோல் எடுத்து உலகளாவியரீதிலையும் பாதை துறந்தாச்சு எண்ட கதைதான், தெரியும் தானே இஞ்ச இருந்து 2 ரூபாயோட உலகத்தயே உண்டு இல்லையெண்டு ஆக்கலாம். பாதை துறந்தாச்சு இந்தமுறை நல்லூர் திருவிழாக்கு இஞ்ச இருந்து வான் பிடிச்சு போறதெண்டும் கொஞ்ச பெடியள் நிண்டு கதச்சுகொண்டிருந்தாங்கள். எனக்கு சில விஷயங்கள் விளங்கேல்ல பாருங்கோ! அப்ப இவளவு நாளும் இஞ்ச என்ன நடந்தது? இப்ப இப்பிடி கதைக்கிறவை தானே கொஞ்ச நாளைக்கு முன்ன வேற மாதிரியெல்லாம் கதைச்சுக்கொண்டு திரிஞ்சவை. இவயள்தானே முந்தி வீர பிரதாபங்கள் கதைச்சு ஆனை வருகுது, பூனை வருகுது எண்டுகொண்டு திரிஞ்சவை!? இப்ப இவைக்கு என்ன நடந்திட்டுது? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறினமாக்கும் என்ன? மாறட்டும் மாறட்டும் மாற்றங்கள் நல்லதுதானே! ஆனா என்ன, பிறகு ஆரும் வந்து வேற ஏதும் சொன்னா அதுக்கும் மாறிடிவினம் காலம் காலமா அப்பிடிதானே. சரி... சரி... எனக்கும் மெல்லமா ஊருக்கு போற ஆசை வந்திட்டுதுபாருங்கோ. வான் பிடிச்சு போறதோ இல்லாட்டி சொகுசு பஸ்சில போறதோ எண்டுதான் இன்னும் முடிவேடுகேல்ல.
அப்ப நீங்கள் எப்ப ஊருக்கு போறியள்?